Tuesday 1 January 2019

கே.எஸ்.ஆர்.மகளிர் கல்லூரி

இணைய முகவரி :

சங்கம் முதல் நவீனம் வரை எழுத்தாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். அதனை மாற்றுவதே இந்த இணையத்தின் இலக்கு.

பல்வேறு துறையை சார்ந்த மாணவிகள் இணைந்து எழுதி வரும் இணையம். இங்கு பல்வேறு துறை சார்ந்த அறிவுகளையும் மற்றும் தனித்திறன்களும்  வெளிப்படுத்தி வருகின்றனர். இதுவரை ஆயிரம் கட்டுரைகள் எழுதப்பட்டு உள்ளது.

மேலும் ஒரு இணையத்தளம் பெண்களை கொண்டு இயங்க முடியும் என்பதை கடந்து நம்மை வியப்பில் ஆழ்த்தும் இணையம்.

கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி. இது பெண்களின் உரிமைக் குரல்.

சாதியற்ற சமூகம்



சாதியற்ற சமூகம் கனவில் மட்டுமே...

https://m.facebook.com/story.php?story_fbid=1996184460475775&id=100002527224258

ஒவ்வொரு வரிகளையும் படிக்கும் போது கண்கள் பிரிந்து  விரிந்து மூடினேன்.. இப்படியும் சிலர் இருந்தார்கள் என்று நினைக்கையில் பெண் ஒரு போதைப் பொருளாகவும் காட்சிப் பொருளாகவும் இருந்துள்ளனர். இப்பவும் சில இடங்களில் இருக்கின்றனர் என்று நினைக்கையில் நெஞ்சம் சத்தம் இடாமல் பலத்த மௌத்தால் வெதும்புகிறது..

சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லும் அதே பள்ளியின் தான் சாதிச் சான்றிதழ் கேட்கிறார்கள்.. சாதி என்பது ஒன்றே அதுவே மனிதம். சாதி வெறியர்கள் ஒழிந்தால் மட்டுமே இதற்கு விடியல் உண்டு.. உடம்பில் ஓடும் செங்குருதி நிறம் சிவப்பு தானே தவிர அதில் சாதி இல்லை.. அப்படி பார்த்தால் நாம் உண்ணும் உணவில் இருந்து அது ஜீரணமாகி வெளியேறும் மலம் முதல் எல்லாம் யாரை நீங்கள் தீண்டத்தாகதவர்கள் என்று நினைத்தீர்களோ அவர்களே அதனை உருவாக்கி சுத்தம் செய்கின்றனர். அதில் எப்படி சாதியை கண்டுப்பிடிப்பீர்கள்?

முடிக்க மனமில்லாமல் புதிரோடு செல்கிறேன்.தேடலின் தொடக்கம் தங்களிடம் ஒப்படைக்கிறேன்..

Monday 31 December 2018

வேர்களைத்தேடி


ஒவ்வொரு வருடங்களும் ஏதோ ஒரு சிலகொள்கையுடன் ஆரம்பிக்கிறோம். தினம்தினம் ஒரு புதிய நாள் தான் ஆனால் புத்தாண்டு அன்றும் பிறந்தநாள் அன்றும் ஏதோ இனம்புரியாத மகிழ்ச்சியும் ஆர்வமும் ஏற்படும். அன்றுமுதல் நாம் எதையாவது ஒன்றை கடைப்பிடித்து வரவேண்டும்.நானும் அப்படியே தொடங்குகிறேன்.  சரியாக மூன்று ஆண்டுகள் கழித்து எனது வலைத்தளத்தை இன்றுமுதல் புதுப்பிக்க உள்ளேன். இன்றுமுதல் எனது பக்கத்தில் நாளொரு இணையம், பெண் ஆளுமைகள் மற்றும் நூல் விமர்சனம் ஆகிய இரண்டும் வாரத்தில் ஒருமுறை மட்டும் அறிமுகம் செய்ய உள்ளேன்.

அதன் தொடக்கமாக இன்று வேர்களைத்தேடி என்ற இணையதளத்தை பற்றி பார்க்கலாம்.

இணைய முகவரி http://www.gunathamizh.com/p/2.html?m=1

தமிழ் இலக்கியத்தை படித்தால் நீயே மனிதன். ஆம் இலக்கியத்தை படிக்க படிக்க தேடல் உருவாகும். அதற்கு இனங்க உருவாக்கப்பட்ட தளம் இது. சங்கம் முதல் நவீனம் வரை ஒரே தளத்தில் யாவருக்கும் எளிதில் புரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அறிவுத் தேடல் வாழ்க்கை தேடல் சமூக விழிப்புணர்வு அறிவியல் தொழில்நுட்பம் வணிகம் மற்றும் பிற.

இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளடக்கிய இணையத்தளம். போட்டித்தேர்வு மற்றும் வாழ்க்கை தேர்வுக்கு சிறந்த இணையத்தளம்.

வேர்களைத்தேடி. மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை..

நன்றி.. அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்...

Saturday 27 February 2016

இன்று காளையா..?? கரடியா..?? (28.02.2016)



பங்கு சந்தை வர்த்தகம்..!!

Image result for share market photo in tamil

அன்புடையீருக்கு வணக்கம்,
 கடந்த பதிவு(ஏன் தேவை பங்கு சந்தையில் முதலீடு) இதுக் குறித்து இன்று  ஒரு தொலைநோக்கு பார்வையை பார்க்கலாம் நண்பர்களே..!!

பங்குச்சந்தை என்றால் என்ன?

            பொருட்களை வாங்கவும் விற்கவும் பலரும் கூடுமிடம் சந்தை எனப்படுவது போல, பங்குகளை வாங்கவும் விற்கவுமான இடமே பங்குச் சந்தை எனப்படும். ஆனால், காய்கறிக்கோ, மற்ற பொருட்களுக்கோ தேவைப்படுவது போல, பங்குச்சந்தைக்கு ஒரு குறிப்பிட்ட இருப்பிடம் தேவையில்லை. கணிணி மூலமாகவும், முகவர்கள்(Brokers) மூலமாகவும் பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியும். இன்றைய தேதியில் உலகப் பொருளாதாரம் பங்குச்சந்தையைப் பெரும்பாலும் சார்ந்துள்ளது என்றால் அது மிகையன்று. எனவே பங்குச் சந்தையைப் பற்றி நாம் அறிந்துகொள்வது இன்றியமையாதாகிறது. 


பங்குச்சந்தையைப் பற்றி அறிந்துகொள்ளுமுன் வேறு சிலவற்றைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.அவற்றைப் பார்ப்போமா?

Image result for share market photo in tamil


முதலீடு செய்யும் வழிகள் :

                                மிகவும் கடினமாக உழைத்து நாம் சேமித்த பணத்தை, சரியான முறையில் முதலீடு செய்வது அவசியம். முதலீடு செய்வதற்குப் பல வழிகள் உள்ளன. அவற்றின் சாதக பாதகங்களைப்  பார்க்கலாமா?


அசையும் சொத்துகள்;

     நகை,வங்கிச்சேமிப்புகள்,கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகள்  முதலியவை இவ்வகைச் சாரும்.தங்கள் என்பது நல்ல முதலீடாக கருதப்படுகிறது.ஆனால் அதை பாதுகாப்பு குறித்து சற்று பயம் தான்.ஆனால் தங்கத்தை வாங்கி அதை விற்றால் அதிக இலாபம் ஈட்டலாம்.விலை உயரும் போது நல்ல இலாபம் பெற இயலும்.

வங்கிச் சேமிப்புகள்(Bank Deposits) நடுத்தர வர்க்கத்தினராலும், முதியவர்களாலும் மிகவும் விரும்பப் படுவது. அபாயமில்லாதது(Risk free). பரிவர்த்தனைகள் (Transactions) எளிமையானவை. ஆனால், இதில் வரவு, சற்றே குறைவுதான். கடன் பத்திரங்கள் (Bonds) பொதுவாக வங்கிச்சேமிப்புகளை விட அதிகமாகவும், பங்குகளை விடக் குறைவாகவும் லாபம் ஈட்டித்தரும் முதலீடுகள்.

அசையாச் சொத்துகள்;

     நிலம், வீடு முதலியவற்றில் செய்யப்படும் முதலீடு மிகவும் லாபகரமானது. இவற்றின் மதிப்பு பொதுவாக உயருமே அன்றிக் குறைவதில்லை. ஆனால், இது, சிறு முதலீட்டிற்கு ஏற்றதில்லை. நிலமோ, வீடோ வாங்கவேண்டுமானால், பொதுவாகப் பெருந்தொகை தேவைப்படக்கூடும். மேலும், இவற்றை, இலகுவாக அவசரத் தேவையின்போது விற்க இயலாது, மொத்தமாக, ஏதேனும் உபரிப்பணம் வரும்போது, நீண்ட காலத்தேவையை மனதில் கொண்டு, செய்யக்கூடிய சிறந்த முதலீடு இது எனினும், சிறு வருமானம் உடையவர்களோ, குறுகிய காலத்தில் தமது முதலீட்டைப் பணமாக மாற்ற வேண்டுமென்று நினைப்பவர்களோ இவ்வகை முதலீட்டினை மேற்கொள்ளுவது கடினம்.

சரி பங்கு என்றால் என்ன அதற்கு முதலில் விடை வேண்டுமல்லவா..??

Image result for பங்குகள்

பங்குகள்;

    நீங்கள் ஒரு தொழிலை தொடங்க வேண்டும் என்றால் அதற்கு மூலதனம் வேண்டுமல்லவா..??.........................................................


என்ன புரியவில்லையா நண்பர்களே இப்படினா இந்த பதிவு தொடரும் என்ற அர்த்தம்.தொடர்ந்து இணைந்திருங்கள் இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்.நன்றி..

Image result for பங்குகள்

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...