Thursday 14 January 2016

உழவுக்கு உயிரூட்டுவோம்..!!





முன்னுரை;

உணவு, உடை, இருப்பிடம் என்பது குடிசையில் இருந்து மாட மாளிகையில் வாழ்பவர்கள் அனைவரது அடிப்படைத் தேவைகள் ஆகும்.பூமி எப்படி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறதோ அதுபோல தான் விவசாயியும் தனக்கு வேண்டிய உணவை உற்பத்திச் செய்துவிட்டு பிறருக்கும் உணவை உற்பத்திச் செய்து தருகின்றனர்.இப்படிப்பட்ட விவசாயின் உழவுக்கு உயிரூட்வோம் என்ற வகையில் சில கருத்துகளை காண்போம்.

உழவு என்பதன் பொருள்;

உழவு தொழில் அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவு மற்றும் பிற பயன்பாடுகளுக்காக சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும் கால்நடைகளை வளர்பதையும் குறிக்கும்.வேள் என்னும் சொல்லின் அடியாகப்  பிறந்த வேளாண்மை எனும் சொல் பொதுவாக கொடை,ஈகை ஆகியவற்றைக் குறிக்கும்.நிலமானது தரும் கொடையால் தான் இப்பெயர் வழங்கியிருக்கலாம்.வேளான் என்னும் சொல் வெள்ளத்தை ஆள்பவன் என்றும் பொருளது என்பர்.வேளாண்மை என்ற சொல் விருப்பத்துடன் பிறரைப் பேணுதல் என்ற பொருளும் உண்டு.

நெல் உற்பத்தி தொடக்கம்;

கி.மு.7000 நூற்றாண்டில் கோதுமை மற்றும் பார்லி வகைப் பயிரிடப்பட்டன.பிறகு தான் கோதுமையை விட நெல் (அரிசி) அதிகளவில் பயிரிடப்பட்டன.கடந்த நமது முன்னோர்கள் காலத்தில் சுமார் 4,00,000 இலட்சம் நெல் வகைகள் பயிரிடப்பட்டன.ஆனால் இன்று 130 நெல் வகைகள் மட்டும் தான் பயிரிப்படுக்கின்றன என்பது எவ்வளவு கசப்பான உண்மை.

உழவுக்கு சான்றோர் தந்த சான்றுகள்;

உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பது பழமொழி.ஆம் அனைவரும் கணக்கு பார்பது  போல உழுகின்றவனும் கணக்குப் பார்த்தால் உணவு கூட மிஞ்சாது.

செங்கோல் நடத்துவது உழவனின் ஏரடிக்கும் சிறுகோல் என்றுரைத்தார் கம்பர்.

உலகம் என்னும் தேருக்கு உழவனே அச்சாணி என்றுரைத்தார் வள்ளுவர்.

இந்தியாவின் முதுகெழும்பு விவசாயம் என்றுரைத்தார் அண்ணல் காந்தி.

ஔவையார், இளவரசரே வாழ்க என்று வாழ்த்தவில்லை.அரசே  உன் வரப்புகள் உயர்க என்று தான் வாழ்த்துவார்.காரணம், வரப்புயர நீருயரும்,நீருயர நெல்லுயரும்,நெல்லுயர குடியுயரும்,குடியுயர கோனுயர்வான் என்ற உம்மையை உவமையாக கூறுவார்.

ஏன் அண்மையில் விதைக்கப்பட்ட அ.ப.ஜெ.அப்துல் கலாம் ஐயா கூட இந்தியா வல்லரசு அடைய வேண்டும் என்றால் விவசாயம் மேன்மை அடைய வேண்டும் என்றுரைத்துச் சென்றனர் நம் சான்றோர்கள்.

நீரின்றி அமையாது உழவு;



என்னடா நீரின்றி அமையாது உலகு என்று தானே வள்ளுவர் கூறிப் படித்திருந்தோம்.இப்போ வேற மாறி இருக்கே என்று நினைக்கத் தோன்றுகிறதா..??உண்மை தான் இனி வரும் காலத்தில் நீரின்றி அமையாது உழவு என்பது மிகைதான்.காவேரியிலும்  நீரில்லை நிலத்தடி நீரும் இல்லை.பிறகு எப்படி உழவு செய்து அறுவடை செய்வது..??இயலாத ஒன்று தான்.

ஒரு உதாரணம்;

சாணத்தை சாணமாக விற்றால் கிலோவிற்கு ஒரு(1) ரூபாய்.அதே சாணத்தில் இருந்து பயோ கேஸ் ஆக பிரித்து விற்றால் கிலோவிற்கு ஆறு (6) ரூபாய்.மேலும் அதே சாணத்தை மீன் வளர்ப்புக்கு கொடுத்து மீனாகப் பெற்றால் கிலோவிற்கு நூறு (100) ரூபாய் எனப் பல்வகையில் இலாபம் ஈட்டலாம்.

விவசாயி அடையும் துயரம்;

மூன்று வேளை சோற்றுக்கு உற்பத்திச் செய்தவன் அடுத்த வேளை சோற்றுக்கு என்னச் செய்வது என்று தெரியாமல் வருந்துகிறான் விவசாயி.மேலும் விவசாயம் செய்ய காலநிலையை நம்பி தான் விவசாயம் செய்கிறான்.ஆனால் அந்த காலநிலை கூட  அவர்களை ஏமாற்றிவிடுகிறது.எப்படி தெரியுமா..??மழை அதிகமாகப் பொழிந்தாலும் கஷ்டம் மழைப் பொழியாவிட்டாலும் கஷ்டம் தான் நமது விவசாயிகளுக்கு.இவ்வுலகம் கண்டிடாத பிரச்சனையும் இல்லை.மாற்றிடாதப் பிரச்சனையும் இல்லை.

உழவர் திருநாள்;

வீட்டில் சூரியன் ரதத்தில்  வருவது போல கோலமிட்டு மாவிலை தோரணங்கள் கட்டி வீட்டை அலங்கரிப்பார்கள்.பொங்கலுக்கு தமிழர் திருநாள் என்பதைப் போல உழவர் என்ற சிறப்பு பெயரும் உண்டு.உழவுக்கும்,தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பதற்கேற்ப உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது.உழவர்கள் இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள் வருடம் முழுவதும் வயலில் வியர்வை சிந்த உழைத்த உழவர்கள் பகவலனுக்கு (சூரியனுக்கு) நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

எப்போது உதயமாகும் விவசாயம் குறித்த ஞானம்;



பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கலாம்..ஆனால் உணவு உற்பத்திச் செய்ய விவசாயம் என்ற ஒருமுறை தான் உண்டு.

வயிற்றுல பசி இருக்கறவரைக்கும் விவசாயம் அழியாது.ஒரு நாள் விவசாயத்த கார்போரைட் கம்பெனி நடத்தும் அப்ப அரிசியோட விலை தங்கத்தை விட அதிகமாக இருக்கும்.அன்னைக்கு தான் தெரியும் நம் விவசாயியின் மதிப்பும், உணவின் மதிப்பும்.இவர்கள் சேற்றில் கை வைத்தால் தான் நம்மால் சோற்றில் கை வைக்கமுடியும்.இவர் தான் விவசாயி.காலம் கடந்து கிடைக்கும் ஞானம் பயனற்றது.

முடிவுரை;



நான் இந்த கட்டுரையை எழுதும் போது நாம் சாப்பிடும் உணவின் பின்னால் ஒரு விவசாயி அடையும் துயரமும் வேதனையும் கண்டு மனம் நொந்து போனேன்.நாம் இது தெரியாமல் உணவை எப்படி எல்லாம் வீண் செய்கிறோம்.உணவின் பின் ஒரு விவசாய குடும்பமே இருக்கிறது.மேலும் விவசாயத்துக்கு அவர்கள் கடன் வாங்கி அதை திருப்ப செலுத்த இயலாமல் சிலர் உயிர் துறந்து விடும் நிலையைக் கண்டு மனம் வேதனை அடைகிறது.வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடும் வள்ளலாராக இருக்க நம்மால் இயலாம் போனாலும் வறுமைத் துயரினால் உயிர் துறக்கும் உழவரின் சோகம் தணிக்கும் மனம் கொண்ட மனிதனாக மாற முயற்சிப்போம்.முடிந்த வரை உணவை வீண் செய்யாதீர்கள்.விளை நிலம் விளை நிலமாகவே இருக்கட்டும் விலை நிலமாக மாறினால் விளைவு மரணம் என்பதை நினைவில் கொண்டு வாழ்வோம். அனைத்து விவசாயக் குடும்பத்துக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் பல..

வாழ்க விவசாயம்..!!வளர்க வரப்புகள்..!!








Sunday 10 January 2016

MOBILE COMMERCE

                                              
                                      MOBILE COMMERCE


WHAT IS MOBILE COMMERCE..??

           You all know about the e-commerce , which means you can buy things online without going to shop.so e-commerce is become necessary for any business to get good sales over internet. Now a days, mobile companies invented new smart phones day by day. So, user can get all the information online on their cell phones. These e-commerce companies are targeted these smart phone users through mobile website and due to this mobile website mobile commerce came in existence..   

ADVANTAGES  OF MOBILE COMMERE:
             This mobile commerce is beneficial for both type of business LARGE SCALE & SMALL SCALE. The mobile users increase day by day, so through mobile commerce your business get large & growing market place for wild range of goods & services..

COVER WILD DISTANCE:
                 Mobile is the only technology which is now become necessary for any person in social & business life than computers. So, it is easy to reach users through mobile commerce.

CONSUMER DEALS:
                    As more users use mobile commerce there are lots of companies use mobile commerce site to reach them by giving different & better deals in comparison of their competitor..

SAVINGS:
                  Companies try to the consumer directly through mobile commerce so users have no need to go far to the store physically & at the end it saves user's time & money.

EASY TO USE:
                     There is no need of skilled consumer. Buyers can have took thousands of items on their cell phones & there is no need of online checkout process..

DISADVANTAGES OF MOBILE COMMERCE:
               Every invention has its own merits &demerits. It is applicable in this mobile commerce business also..

Smart phone limitation:
              Mobile has no big screen like desktop (or) laptop so sometimes users tired to navigate more &more to choose just one item from thousands. It affects shopping rate..

Habituate:
               Every new technology has some problem at the starting phase. Here mobile commerce is new application so sometimes people avoid to change which are rapidly change. As they are habituate to buy products from e-commerce.

Risk factor:
               Each business has its own risk. Same mobile commerce is the growing field is become risky. Because technology change day by day . Moreover there less security in wireless network, so in data transfer hacking chances are more..

Connectivity:
                     Mobile commerce needs high speed connectivity of 3G. Otherwise it is become hectic for user to go through entire product purchase process..




அ.ப.ஜெ.அப்துல் கலாமுக்கு சமர்பணம்..!!!





விண்வெளியில் விண்கலன்களை ஏவின கைகள்

இன்று விண்ணிற்கே சென்றது ஏனோ..!!

நாங்கள் இழந்தது விஞ்ஞானி அல்ல

இந்திய தேசத்தின் விஞ்ஞானம்..!!

இது அழுகை அல்ல

இன்று பிறந்த குழந்தைகளின் குமுறல்..!!

இந்தியாவை இமயத்திற்கு கொண்டு சென்ற நீ

இமயத்தைக் காட்டிலும் உயரமான இடத்திற்கு

சென்றது ஏனோ..!!

நீ இல்லாத தேசத்தில்

நாங்கள் எவ்வாறு வாழ்வோம்..??

உன்னுடைய காலத்தில் நாங்கள் வாழ்ந்தது

எங்கள் பாக்கியம்-உன்னை காணமுடியாமல்

போனதோ எங்கள் துர்பாக்கியம்..!!

உன் முடியோ அழகு-நீ எடுத்துவைக்கும்

ஒவ்வொரு அடியும் அற்புதம்..!!

அப்துல் கலாம் என்ற பெயர் சூட்டியதும்

நீதான்..!!!

கோவிலுக்கு சென்று இந்தியா என்ற

பெயரில் அர்ச்சனை செய்ததும் நீதான்..!!

இதுவே தேசத்தின் மீது நீ வைத்த நேசத்தை

பரைசாற்றுகிறது..!!!

பாரத தேசத்தில் ஒரு கலாம் -இனி

பார்க்கமுடியுமா..??மற்றொரு கலாம்..!!

உன்னத மாமனிதனே உனக்கு நிகர் நீயே..!!

கடல் அளவு கூட போதாது உன்னை போற்ற

எவர் இருக்கிறார் உன்னை தூற்ற..??

விண்வெளி கூட உன் காலடியில்

நாளைய இந்தியா யார்கையில்..??

இராமேஷ்வரம் புனிதத்துவம் அடைந்தது உன்னால்..!!

உலகம் இராமேஷ்வரத்தை அறிந்ததும் உன்னால்..!!

இந்தியாவுக்கு விடியல் எந்நாள்..??

உன் கனவுகள் நனவாக போவது எந்நாள்..??

உதித்தெழுவோம் உனக்காக நாளைய

நாளைய இந்தியா நமக்காக..!!

வாழ்க கலாம்..!!வளர்க இந்தியா..!!

2020-லோ வளர்ந்த இந்தியா..!!

கட்டாயம் நிறைவேறும்..!!






Saturday 2 January 2016

எங்கே செல்கிறது நமது பாரதம்..!!

 இந்தியா ஓர் அறிமுகம்..!!!


நமது நாகரீகம் சிந்து சமவெளியில் ஆரம்பம் பெற்று இன்று  வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றும் அவர்களின் நாகரீகத்தை பின்தொடர்கின்றோம்.அன்று நம்மிடம் இருந்த இயற்கை வளத்தைக் கண்டும், வியாபாரம் செய்யவும் வந்தவர்கள் தான் போச்சுகீசியர்கள்.பிறகு தான் பிரிட்டிஷ் ஆட்சி நமது நாட்டை அடிமைப்படுத்தியது..கிழக்கிந்தியக் கம்பெனி கி.பி.1600-ல் இந்தியாவில் நுழைந்து நமது வளங்களுக்கு நாம் அவர்களிடம் கட்டினோம் வரி.அதற்கு பதிலடி கொடுத்தார் நமது கட்டபொம்மன் ..அண்ணல் காந்தி,நேரு,திலகர்.வ.உ.சி,குமரன்,காமராசன் மற்றும் பலர் நம்மை ஒருங்கிணைத்து சுதந்திர போராட்டத்திற்காக கூக்குரல் எழுப்பினார்கள்.ஆகஸ்ட் திங்கள் 15-ம் தேதி நள்ளிரவில் ஆங்கிலக் கொடி இறக்கப்பட்டு இந்தியக் கொடி ஏற்றி எப்படியோ அடைந்து விட்டோம் சுதந்திரம்.


எங்கே நமது ஒருமைபாடு..!!

அன்று நமது பாரத மக்கள் ஒற்றுமை உணர்வோடு இருந்தனர் என்று நமது பாடப்புத்தகங்களில் படித்திருப்போம்.அது உண்மை தான்.அன்றைய காலக்கட்டதில் குமரி முதல் இமயம் வரை தமிழ் மொழி மட்டுமே பேசப்பட்டது உண்மை.ஆனால் இன்று நமது நாட்டில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் மொத்தம் 22.ஏன் இந்த மொழி பிரிவினை ..?? அதற்கு நாம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இருக்கலாம்.அது மட்டுமா இல்லை ஜாதி, மதம் மற்றும் மொழி போன்ற ஏரளமான பிரிவுகள்..இன்றைய தினத்தில் நமக்காக உயிர் துறந்தவர்கள் இருந்தால் அவர்களின் எண்ணம் இதற்கா சுதந்திரம் பெற்றுத் தந்தோம் என்று வருந்துவர்.இன்று எங்கே ஒருமைபாடு..??


எங்கே விவசாயம்..!!

வானம் பார்த்து விவசாயம் செய்த புண்ணிய பூமி ஆனால் இன்று மானம் மற்றும் பணத்தைப் பார்த்து செய்கின்றோம் விவசாயம்..ஒவ்வொரு விவசாயிகளும் நமக்கு கடவுளாக இருந்தன அன்னமிட்ட கைகள்..இன்று கைதிகள் அவர்கள் ஆசை என்னும் பிடியில்.ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு திடமாக இருந்தோம் இன்று பீட்சா,பர்க்கர்,நூடுல்ஸ் என்ற ஆங்கில உணவைச் சாப்பிட்டு வருக்கின்றோம்..நாளைய சமுதாயத்திற்கு கொடுக்கப்போவது உணவா..??மரணமா..??

பணமா..??பிணமா..??

யார் புதைத்தது பணம் என்ற பிணைத்தை நம்முள்.ஒருக்கட்டத்தில் பணம் தேவைப்பட்டது உயிர் வாழ இன்று வாழ்வதே படணத்திற்காக தான்.பணத்தை உருவாக்கியதே மனிதன் தான் ஆனால் இன்று பணம் தான் மனிதனை உருவாக்குகிறது.என்ன கொடுமை..??

அரசா..??தனியாரா..??


நம் எல்லாருக்கும் தெரிந்த உண்மை.ஆனால் எதுவும் செய்ய இயலவில்லை நம்மால்.!!

அரசு நடத்த வேண்டிய கல்வி இன்று தனியார் நடத்துகிறது.தனியார் நடத்த வேண்டிய டாஸ்மார்க் அரசு நடத்துகிறது.நமது அரசாங்கத்துக்கு டாஸ்மார்க் இருந்து தான் அதிக வருமானம் கிடைக்கிறது என்பது உண்மை.

கல்வி வியாபாரமா..??சேவையா..??

கல்வி என்பது சேவையாக இருந்தது..இன்று அதே கல்வி வியாபாரம் ஆனது ..படிக்க ஆர்வமுள்ள குழந்தைகளாக படிக்க இயலவில்லை காரணம் கட்டாயக் கல்வி கட்டணம் கல்வியாக மாறியது தான் ..கல்வி முறை என்பது நாளைய சமுதாயத்தை உருவாக்குவது .ஆனால் இந்த வியாபாரம் நம்மை பகைவன் ஆக்குகிறது.அரசு பள்ளிகள்,கல்லூரிகள் மற்றும் மருத்துவமனை வேண்டாமா ஆனால் அரசு வேலை மட்டும் வேண்டுமா நம் மக்களுக்கு..

முடிவு..!!


எனது பார்வையில் நான் காணும் பாரதம்.இனம்,மொழி,மதம்,ஊழல் மற்றும் லஞ்சம் நிறைந்தது  தான் இந்தியா..இதை யாராலும் மறுக்க இயலாது..எனது கவலைகள் அனைத்தும் நமது இந்தியா எப்போது வல்லரசு அடையும் ..முடியும் இன்றைய தலைமுறைக்கு வழிவிடுங்கள் ..இன்றைய தலைமுறை நாளைய சமுதாயம் என்பது வார்த்தையால் மட்டுமில்லாமல் செயலிலும் வேண்டும்..சிந்தியுங்கள் இது நமது பாரதம்.எனது தமிழ் ஆசிரியர் முனைவர்.இரா.குணசீலன் ஐயா அடிக்கடி என்னிடம் கூறுவது எதையும் நம்மால் மாற்ற இயலாது நம்மை நம்மளே மாற்றினால் தான் உண்டு என்று இது என் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது..ஒவ்வொருவரும் தன்னை தானே மாற்றினால் கட்டாயம் மாறும் நம் பாரதம்..

ஒன்று முதல் பத்து வரை..!!


ஐந்து ஐந்து..!!


1. பஞ்சவர்ணம் என்பது கருப்பு,சிவப்பு,பச்சை,மஞ்சள் மற்றும் வெள்ளை.

2.பஞ்சலோகம் என்பது பொன்,வெள்ளி,செம்பு,ஈயம் மற்றும் இரும்பு.


3.பஞ்ச வாசம் என்பது ஏலம்,லவங்கம்,கற்பூரம்,திப்பிலி மற்றும் ஜாதிக்காய்.

4.பஞ்ச ரத்தினம் என்பது பொன்,சுகந்தி,மரகதம்,மாணிக்கம் மற்றும் முத்து.

5.பஞ்ச பூதம் என்பது ஆகாயம்,நீர்,காற்று,நெருப்பு மற்றும் நிலம்.

6.பஞ்ச பாண்டவர்கள் என்பவர்கள் அர்ஜீனன்,பீமன்,நகுலன்,தர்மன் மற்றும் சகாதேவன்.


ஒன்பது ஒன்பது..!!

1.பைசா கோபுரம் ஒன்பது மாடிகள் கொண்டது.

2.ஆஸ்கார் சிலை ஒன்பது பவுண்டு (4 கிலோ) எடை கொண்டது.

3.ஆக்யஸ் எனும் தேளுக்கு ஒன்பது கொடுக்குகள் உள்ளன.

4.செவ்வாய் கிரகத்தில் ஆண்டுக்கு ஒன்பது மாதங்கள் பகலாக இருக்கும்.

5.சூரிய ஒளி பூமியை வந்தடைய ஒன்பது நிமிடங்கள் ஆகும்.

6.ஈரான்-ஈராக் போர் ஒன்பது ஆண்டுகள் நடைப்பெற்றன.


ஒன்று முதல் பத்து வரை..!!

1.ஒரு செல் உயிரினம் அமீபா.

2.இரண்டு தலைநகர் கொண்டது ஜம்மு-காஷ்மீர்.

3.மூன்று வயிறுள்ள விலங்கு ஒட்டகம்.

4.நான்கு வேதங்கள் ரிக்,யசுர்,சாமம் மற்றும் அதர்வணம்.

5.ஐந்து வைட்டமின் அடங்கிய பழம் வாழைப்பழம்.

6.ஆறு கால்கள் கொண்டவை பூச்சியினம்.

7.ஏழு குன்றுகளின் நகரம் எனப்படுவது ரோம்.

8.எட்டு நூல்களின் தொகுப்பு எட்டுத் தொகை.

9.ஒன்பது கோள்களை உடையது சூரிய குடும்பம்.

10.பத்து கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டது பைபிள்.


நன்றி..!!

அருணா பப்ளிகேஷன்ஸ்-சென்னை..

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...