Friday 31 July 2020

வார்த்தைகளே எல்லாம்...



வரைபடம் : சஞ்சுனா தேவி 

வார்த்தைகள் பாராட்டும் போதும் மனமகிழ்ச்சி தருகிறது. அதே வார்த்தை ஆறுதல் தரும் போது விமோசனம் தருகிறது.. 

Tuesday 28 July 2020

உன் பயணத்தின் பாகன் நீ...



வரைபடம் : சஞ்சுனா தேவி 

நம்மைச் சுற்றி எண்ணற்ற கருத்துக்களும் எதிர்மறை நேர்மறைச் சிந்தனைக் கொண்டவர்களும் உண்டு. வாழ்க்கையை இரசித்து வாழ்பவர்களும் உண்டு அதே சமயம் வாழ்க்கையை வெறுத்து வாழ்பவர்களும் உண்டு.நிறைகளைப் பார்க்கும் மனிதர்களும் உண்டு அதைவிடக் குறைகளை மட்டும் அதிகம் பார்க்கும் மனிதர்களும் உண்டு.  உதவும் மனிதர்களும் உண்டு, உதவியை மறக்கும் மனிதர்களும் உண்டு, உதவி செய்ததைச் சொல்லிக் காட்டும் மனிதர்களும் உண்டு. நன்றியுடன் இருக்கும் மனிதர்களும் உண்டு நன்றியை மறந்தவர்களும் உண்டு. பலன் எதிர்பார்க்கமால் செய்பவர்களும் உண்டு எதிர்பார்த்து செய்பவர்களும் உண்டு.அன்பு செலுத்துபவர்களும் உண்டு, அதை வெறுப்பவர்களும் நிராகரிப்பவர்களும் உண்டு.

Monday 27 July 2020

மாற்றம் ஒன்றே மாறாதது...




விதையின் மாற்றமே வேர்...
நேற்றைய மாற்றமே இன்று...

Friday 24 July 2020

நீங்கள் கவலைப்பட வேண்டிய அந்த ஒரு நபர் யார் தெரியுமா...





#நூல்விமர்சனம்

நூல் : நீங்கள் கவலைப்பட வேண்டிய அந்த ஒரு நபர் யார் தெரியுமா ?

ஆசிரியர் : சாந்த குருஸ் ஜெகநாதன்

பதிப்பகம்: தெரியவில்லை (அமேசான் கின்டலில் இலவசம்)

Thursday 23 July 2020

மௌன தாரகையே...


வரைபடம் கமலி சு.சு


அட கொஞ்சம் அமைதியா இருப்பா..
சத்தம் போடாதப்பா..
மெல்ல பேசுப்பா..
நொய் நொய்ன்னு இருக்காதப்பா..
சிரிச்சுட்டே இருப்பியா..
சண்டைக்குன்னே வராதப்பா..

களவாடிய பொழுதுகள்...



#நூல்விமர்சனம்

நூல் : களவாடிய பொழுதுகள்

ஆசிரியர் :  இரா.புகழேந்தி

பதிப்பகம் : தெரியவில்லை ( அமேசான் கின்டலில் இலவசம் )

Wednesday 22 July 2020

முதல் காதல் தோல்வியா...


கமலி சு.சு


காதல் தோல்வி -ன்னு கேள்விப்பட்டு இருப்போம்.  அதென்ன முதல் காதல் தோல்வியா ? அப்படின்னு யோசிக்கறீங்களா?  முழுமையா இந்த பதிவை படிங்க. சுறுக்கமா சொல்லிடுறேன்.அப்புறம் சொல்லுவீங்க கல்யாணத்துக்கு முன்னாடி எத்தனை காதல் தோல்விகளை நாம கடந்து வந்திருக்கோம் -ன்னு...!

Tuesday 21 July 2020

காற்சிலம்பு சிறையானதே...



வரைபடம் : சஞ்சுனா தேவி.

ஒரு பெண்ணின் காற்சிலம்புக்கு அவ்வளவு சக்தி உண்டு. ஆம் இன்று வரை யாராலும் மறு(றை)க்க முடியாது அந்த பேதையின் கோப திவலைகள். கண்ணகி என்றால் இன்றும் நினைவு வருகிறது அல்லவா. 

உன் மடியினில் மயங்கிய விழிகள்...



#நூல்விமர்சனம்

நூல் : உன் மடியினில் மயங்கிய விழிகள்

ஆசிரியர் : தமிழ் ப்ரியன்

பதிப்பகம்: தெரியவில்லை ( அமேசான் கின்டலில் இலவசம்)

Monday 20 July 2020

என்ன வாழ்க்கை இது...



நமது கையில் இருக்கும் விரல்களை போல தான் நம் வாழ்க்கையும் இருக்கும் என்பதை என்றேனும் கவனித்தது உண்டா நாம் ? என்னது கைவிரல் போல வாழ்க்கையா?  பொதுவா கைரேகை வைச்சு தானா வாழ்க்கையை சொல்வாங்க இவங்க என்னடா கைவிரல் சொல்றாங்களே?  என்று ஆச்சரியமாகவும் நமக்கு இருக்க குட்டி மூளையை கசக்கி யோசிக்கவும் வேண்டாம். நானே சொல்றேன், ஆம் கைவிரல் போல தான் நம் வாழ்க்கை.

Friday 17 July 2020

நீயாக இருக்க ஆசையில்லையா...

எழுதினேன் ஒரு கவிமடல்...


தலைப்பைச் சேருங்கள்

மட்டற்ற பேரின்ப மகிழ்ச்சியில்..


யாரும் எழுதாத எழுத்துகளையும் பேசாத வார்த்தைகளையும் யாராலும் பயன்படுத்தாமல் இருக்க முடியாது.. பலரின் பேச்சுக்களாலும் எழுத்துக்களாலும் வளர்ந்தவர்கள் தான் நாம்.. நான் வணிகவியல் துறை மாணவி என்பது கூட பலருக்கு தெரியாது.. நான் தமிழ்த்துறை மாணவி என்று கருதும் பலர் இங்குண்டு.. தமிழ் எனது தாய்மொழி எனது அடையாளம்.. மேடைகளில் பேசுபவர்களை பார்க்கும் போதும் பல புத்தகங்களில் புழுக்களாக இருந்து வாசிக்கும் போதும் நான் வியந்தது உண்டு.. எம் பாரதியே எனது வீரத்தின் அடையாளம்.. அவருக்கு அடுத்து நான் தமிழை இரசிக்க அவற்றில் இயங்க மற்றொரு காரணம் எனது கள்ளிக்காட்டு நாயகன் தான்.. தமிழை இயற்கையுடன் இப்படியும் ஒப்பிட்டு எழுதலாம் பேசலாம் என்று அவரிடம் இருந்து தான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.. 

கோடி இரசிகைகளில்  நானும் ஒன்று.. எத்தனை பேருக்கு இவர் பதில் அனுப்புவார் என்று தெரியவில்லை..எல்லாரையும் போல நானும் அவருக்கு ஒரு வாழ்த்து செய்தி அனுப்பினேன்.. அவருடைய நெருக்கடியான வேலைநேரத்திற்கு இடையில் எனது கவிமடல் அவருடைய பார்வைக்கு செல்லுமா என்று நினைத்தேன்.. ஆனால் எதிர்பார்க்கவில்லை அதனை படித்து எனக்கு பதிலுரை மின்னஞ்சல் செய்தி அனுப்புவார் என்று.. மின்னஞ்சல் கூட இரண்டாவது மகிழ்ச்சி தான் அவ்வளவு பெரிய மாமனிதனின் எழுத்துகளை இரசித்து வாழ்ந்து கொண்டிருப்பவள் நான்..அவருடைய பேனாவின் எழுத்துகளை தாங்கும் வெள்ளைத்தாளாக இருந்திருக்க கூடாதா என்று எண்ணாத தினங்கள் இல்லை.. இன்று அவருடைய மின்எழுதுகோலில் எனது பெயரை எழுதியது கூட ஒரு கவிதையாக கருதுகிறேன்..

என்னை எனக்கு அடையாளம் காட்டியவர் எனது ஆசான் முனைவர் இரா. குணசீலன் அவர்கள் தான். எனது பெயரை நான் விரும்பும் எனது கள்ளிக்காட்டு நாயகன் எழுதியதில் மீண்டும் உயிர்ப்புற்று எழுகிறேன்..இந்த ஆண்டில் பெரிதும் உடன்பாடு இல்லாமல் தான் இருந்தேன். வேலை மற்றும் நட்பு வட்டத்தில் பெரிதும் இழப்பை மட்டும் சந்தித்து வந்தேன். ஒன்றரை மாதங்கள் சமுகத்தளத்தில் இருந்து இடைவெளி எடுத்தேன். கள்ளிக்காட்டு நாயகன் அவர்களின் பிறந்த நாளுக்கு மீண்டும் இணையம் வர வேண்டும் என்று முடிவு செய்தேன். அதுபோலவே வந்தேன். அவருக்கு ஒரு படையல் விருந்து படைத்தேன் அதனை ருசித்து எனக்கு பதில் தந்ததும் எனது பெயரை உச்சரித்தும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..

எல்லாருக்கும் ஒரு ஆசை இருக்கும் தான் எழுதும் எழுத்துக்களை தான் நேசிக்கும் மனிதர்களின் பார்வைக்கும் அவரின் மனதிற்கும் செல்ல வேண்டும் அதற்கு ஒரு பதிலுரை வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு என்றுமே இருக்கும். அது நிறைவேறினால் அதற்கு இணை வேறு எதுவும் இருக்காது. அந்த பரவச நிலையில் தான் நான் இருக்கிறேன். பலருக்கு இது ஒரு பெரிய விஷயமாக தெரியாது. ஆனால் இந்த குறுஞ்செய்தி எனக்கு கிடைத்த அரிய பெரிய பொக்கிஷம்.அதனால் என்னுடைய இந்த மகிழ்ச்சியை எனது தமிழ் உறவுகளுடன் பகிர்ந்து மகிழ்ச்சியை இரட்டிப்பு ஆகுகிறேன்..

என்னை இணைய உலகிற்கு அறிமுகப்படுத்தியது எமது கல்லூரியும் எனது ஆசானும் தான்.. என்னை கவிஞருக்கு அடையாளம் காட்டியது எனது அன்பு அண்ணன் கேசவன் அவர்கள் தான். இவர்களுக்கு என் றும் நன்றியுடன் இருப்பேன்..

நான் அவருக்கு படைத்த விருந்தை ருசிக்காதவர்கள் மேலே உள்ள இணைப்பை சொடுக்கி ருசிக்கவும்.. எனக்கு எட்டிய தமிழில் இயற்றிய சிறிய படைப்பு..

நன்றி..
கேள்விகளுக்குவிடைத் தேடும் பயணம் தொடரும்...

Tuesday 14 July 2020

கிடைத்து விடும் தேடுங்கள்...



💖... முதலும் நீ.. முடிவும்  நீ.. 🌱 

போதும் என்று உமது வாழ்வை நொந்து விடாதே.. இரசிக்க தெரிந்தால் உமது வாழ்வை விட வேறு எதுவும் சுவாரசியமாக இருக்காது.. 

கற்பழிக்கப் படுகிறாள்...




கண்ணில் வைத்த மை அல்ல பெண்மை...
தொடரும் தொடர்கதை அவள்...
பிறர் புரிந்து கொள்ள முடியாத புதிர் அவள்...
ஆண்மையின் துணையோடு அவள் பயணிக்கிறாள்... 
சித்தரித்தது போதும் ஊடகமே..
போதும் எங்களை விட்டு விடுங்கள்.. 
நாங்கள் சாதனை பெண்கள்..
சோதனைக்கும் வேதனைக்கும் அல்ல நாங்கள்...
எங்கள் வாழ்வில் நாங்கள் அதிசயம்...

Sunday 12 July 2020

கள்ளிக்காட்டு நாயகனுக்காக..







தேனீ காற்றில் மிதந்து வரும் ஈரப்பதம் நீர்...

கள்ளிக்காட்டில் தீடிரென எழுந்த முத்தமிழ் ஊற்று நீர்...

கருவாச்சி காவியத்தில் பெண்மையை தீட்டிய ஓவியர் நீர்..

வில்லோடு நிலவை கட்டி போட்டவர் நீர்...

தண்ணீர் தேசத்தில் காதலை பிணைத்தவர் நீர்...

சிற்பியாக உம்மை நீயே செதுக்கும்  கலைஞன் நீர் ...

தமிழை ஆற்றுப்படையாக்கிய தலைமகன் நீர்...

Saturday 11 July 2020

வாழ்க்கை எனும் ஓடத்தில்...



இன்றைய பதிவுக்கு போறதுக்கு முன்னாடி ஒரு கேள்வி.? முடிந்தால் எனக்கும் பதில் சொல்லுங்கள். ஆனால் கண்டிப்பாக உங்களுக்கு நீங்களே பதில் சொல்லிருங்க..
உங்களுடைய வாழ்க்கையின் முக்கியத்துவம் என்ன என்று தெரியுமா ? நீங்களா?  சமுதாயமா? 

Thursday 9 July 2020

புறம் பேசுங்கள்...

என்னடா பொதுவாக புறம் பேசாதே அப்படின்னு தானே சொல்லுவாங்க. இது கொஞ்சம் புதுசா இருக்கே அப்படின்னு யோசிக்கறீங்களா..? அப்ப இந்த பதிவு உங்களுக்கு தான். 

உணரும் தருணம்..



Tuesday 7 July 2020

பேராசைப் படு தவறில்லை..



ஆசை தான் துன்பத்திற்கு காரணம் என்றார் புத்தர்.நாம் அனைவருமே ஆசைப்படுவோம். ஆசையில்லாத மனிதர்கள் இருக்க முடியுமா ? இல்லை பார்க்க தான் முடியுமா ? ஆசை யாரை தான் விட்டது ? ஆசைக்கும் விருப்பத்திற்கும் நூலிடையே வித்தியாசம் இருக்கிறது. 

Monday 6 July 2020

மகிழ்ச்சிக்கும் அன்புக்கும் விலை என்ன ?




துன்பம் உண்டாயின் அன்றே இன்பமும் உண்டாகும் என்று குகப்படலத்தில் ராமபிரான் தனது படகு ஓட்டி நண்பரான குகனிடம் கூறுவார். இந்த வரிகள் நான் பள்ளி பருவத்தில் கம்பராமாயணம் படிக்கும் போது மனதில் ஆழமாக பதிந்தவை. 

Sunday 5 July 2020

சுய விமர்சனம் செய்யலாமே...



பலருக்கும் கைவந்த கலை ஒன்று இருக்கிறது என்றால் அது பிறரை முன்பின் அறியாமல் விமர்சனம் செய்வது. விமர்சனம் என்பது நல்லது தான். 

Saturday 4 July 2020

எண்ணம் போல் வாழ்க்கை...



நேற்றைய எண்ணங்களின் தொகுப்பு தான் இன்றைய நாளின் செயல்பாடுகள் என்பது மறுக்க முடியாத உண்மை. எண்ணற்ற எண்ணங்களால் தான் நாட்களை நகர்த்தி வருக்கின்றோம். 

மீண்டும் புதிதாக பிறக்கிறேன்..


ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணினி, தொலைபேசி, சமூக வலைத்தளங்கள் என்று இருப்பதும் அவற்றின் வளர்ச்சி தொலைவில் இருக்கும் தொடர்புகளையும் அருகில் வைத்துக் கொள்ள இயலும் என்ற அடிப்படை அறிவும் தெளிவும் மட்டுமே தெரியும். 

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...