Sunday 10 January 2016

அ.ப.ஜெ.அப்துல் கலாமுக்கு சமர்பணம்..!!!





விண்வெளியில் விண்கலன்களை ஏவின கைகள்

இன்று விண்ணிற்கே சென்றது ஏனோ..!!

நாங்கள் இழந்தது விஞ்ஞானி அல்ல

இந்திய தேசத்தின் விஞ்ஞானம்..!!

இது அழுகை அல்ல

இன்று பிறந்த குழந்தைகளின் குமுறல்..!!

இந்தியாவை இமயத்திற்கு கொண்டு சென்ற நீ

இமயத்தைக் காட்டிலும் உயரமான இடத்திற்கு

சென்றது ஏனோ..!!

நீ இல்லாத தேசத்தில்

நாங்கள் எவ்வாறு வாழ்வோம்..??

உன்னுடைய காலத்தில் நாங்கள் வாழ்ந்தது

எங்கள் பாக்கியம்-உன்னை காணமுடியாமல்

போனதோ எங்கள் துர்பாக்கியம்..!!

உன் முடியோ அழகு-நீ எடுத்துவைக்கும்

ஒவ்வொரு அடியும் அற்புதம்..!!

அப்துல் கலாம் என்ற பெயர் சூட்டியதும்

நீதான்..!!!

கோவிலுக்கு சென்று இந்தியா என்ற

பெயரில் அர்ச்சனை செய்ததும் நீதான்..!!

இதுவே தேசத்தின் மீது நீ வைத்த நேசத்தை

பரைசாற்றுகிறது..!!!

பாரத தேசத்தில் ஒரு கலாம் -இனி

பார்க்கமுடியுமா..??மற்றொரு கலாம்..!!

உன்னத மாமனிதனே உனக்கு நிகர் நீயே..!!

கடல் அளவு கூட போதாது உன்னை போற்ற

எவர் இருக்கிறார் உன்னை தூற்ற..??

விண்வெளி கூட உன் காலடியில்

நாளைய இந்தியா யார்கையில்..??

இராமேஷ்வரம் புனிதத்துவம் அடைந்தது உன்னால்..!!

உலகம் இராமேஷ்வரத்தை அறிந்ததும் உன்னால்..!!

இந்தியாவுக்கு விடியல் எந்நாள்..??

உன் கனவுகள் நனவாக போவது எந்நாள்..??

உதித்தெழுவோம் உனக்காக நாளைய

நாளைய இந்தியா நமக்காக..!!

வாழ்க கலாம்..!!வளர்க இந்தியா..!!

2020-லோ வளர்ந்த இந்தியா..!!

கட்டாயம் நிறைவேறும்..!!






Saturday 2 January 2016

எங்கே செல்கிறது நமது பாரதம்..!!

 இந்தியா ஓர் அறிமுகம்..!!!


நமது நாகரீகம் சிந்து சமவெளியில் ஆரம்பம் பெற்று இன்று  வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றும் அவர்களின் நாகரீகத்தை பின்தொடர்கின்றோம்.அன்று நம்மிடம் இருந்த இயற்கை வளத்தைக் கண்டும், வியாபாரம் செய்யவும் வந்தவர்கள் தான் போச்சுகீசியர்கள்.பிறகு தான் பிரிட்டிஷ் ஆட்சி நமது நாட்டை அடிமைப்படுத்தியது..கிழக்கிந்தியக் கம்பெனி கி.பி.1600-ல் இந்தியாவில் நுழைந்து நமது வளங்களுக்கு நாம் அவர்களிடம் கட்டினோம் வரி.அதற்கு பதிலடி கொடுத்தார் நமது கட்டபொம்மன் ..அண்ணல் காந்தி,நேரு,திலகர்.வ.உ.சி,குமரன்,காமராசன் மற்றும் பலர் நம்மை ஒருங்கிணைத்து சுதந்திர போராட்டத்திற்காக கூக்குரல் எழுப்பினார்கள்.ஆகஸ்ட் திங்கள் 15-ம் தேதி நள்ளிரவில் ஆங்கிலக் கொடி இறக்கப்பட்டு இந்தியக் கொடி ஏற்றி எப்படியோ அடைந்து விட்டோம் சுதந்திரம்.


எங்கே நமது ஒருமைபாடு..!!

அன்று நமது பாரத மக்கள் ஒற்றுமை உணர்வோடு இருந்தனர் என்று நமது பாடப்புத்தகங்களில் படித்திருப்போம்.அது உண்மை தான்.அன்றைய காலக்கட்டதில் குமரி முதல் இமயம் வரை தமிழ் மொழி மட்டுமே பேசப்பட்டது உண்மை.ஆனால் இன்று நமது நாட்டில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் மொத்தம் 22.ஏன் இந்த மொழி பிரிவினை ..?? அதற்கு நாம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இருக்கலாம்.அது மட்டுமா இல்லை ஜாதி, மதம் மற்றும் மொழி போன்ற ஏரளமான பிரிவுகள்..இன்றைய தினத்தில் நமக்காக உயிர் துறந்தவர்கள் இருந்தால் அவர்களின் எண்ணம் இதற்கா சுதந்திரம் பெற்றுத் தந்தோம் என்று வருந்துவர்.இன்று எங்கே ஒருமைபாடு..??


எங்கே விவசாயம்..!!

வானம் பார்த்து விவசாயம் செய்த புண்ணிய பூமி ஆனால் இன்று மானம் மற்றும் பணத்தைப் பார்த்து செய்கின்றோம் விவசாயம்..ஒவ்வொரு விவசாயிகளும் நமக்கு கடவுளாக இருந்தன அன்னமிட்ட கைகள்..இன்று கைதிகள் அவர்கள் ஆசை என்னும் பிடியில்.ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு திடமாக இருந்தோம் இன்று பீட்சா,பர்க்கர்,நூடுல்ஸ் என்ற ஆங்கில உணவைச் சாப்பிட்டு வருக்கின்றோம்..நாளைய சமுதாயத்திற்கு கொடுக்கப்போவது உணவா..??மரணமா..??

பணமா..??பிணமா..??

யார் புதைத்தது பணம் என்ற பிணைத்தை நம்முள்.ஒருக்கட்டத்தில் பணம் தேவைப்பட்டது உயிர் வாழ இன்று வாழ்வதே படணத்திற்காக தான்.பணத்தை உருவாக்கியதே மனிதன் தான் ஆனால் இன்று பணம் தான் மனிதனை உருவாக்குகிறது.என்ன கொடுமை..??

அரசா..??தனியாரா..??


நம் எல்லாருக்கும் தெரிந்த உண்மை.ஆனால் எதுவும் செய்ய இயலவில்லை நம்மால்.!!

அரசு நடத்த வேண்டிய கல்வி இன்று தனியார் நடத்துகிறது.தனியார் நடத்த வேண்டிய டாஸ்மார்க் அரசு நடத்துகிறது.நமது அரசாங்கத்துக்கு டாஸ்மார்க் இருந்து தான் அதிக வருமானம் கிடைக்கிறது என்பது உண்மை.

கல்வி வியாபாரமா..??சேவையா..??

கல்வி என்பது சேவையாக இருந்தது..இன்று அதே கல்வி வியாபாரம் ஆனது ..படிக்க ஆர்வமுள்ள குழந்தைகளாக படிக்க இயலவில்லை காரணம் கட்டாயக் கல்வி கட்டணம் கல்வியாக மாறியது தான் ..கல்வி முறை என்பது நாளைய சமுதாயத்தை உருவாக்குவது .ஆனால் இந்த வியாபாரம் நம்மை பகைவன் ஆக்குகிறது.அரசு பள்ளிகள்,கல்லூரிகள் மற்றும் மருத்துவமனை வேண்டாமா ஆனால் அரசு வேலை மட்டும் வேண்டுமா நம் மக்களுக்கு..

முடிவு..!!


எனது பார்வையில் நான் காணும் பாரதம்.இனம்,மொழி,மதம்,ஊழல் மற்றும் லஞ்சம் நிறைந்தது  தான் இந்தியா..இதை யாராலும் மறுக்க இயலாது..எனது கவலைகள் அனைத்தும் நமது இந்தியா எப்போது வல்லரசு அடையும் ..முடியும் இன்றைய தலைமுறைக்கு வழிவிடுங்கள் ..இன்றைய தலைமுறை நாளைய சமுதாயம் என்பது வார்த்தையால் மட்டுமில்லாமல் செயலிலும் வேண்டும்..சிந்தியுங்கள் இது நமது பாரதம்.எனது தமிழ் ஆசிரியர் முனைவர்.இரா.குணசீலன் ஐயா அடிக்கடி என்னிடம் கூறுவது எதையும் நம்மால் மாற்ற இயலாது நம்மை நம்மளே மாற்றினால் தான் உண்டு என்று இது என் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது..ஒவ்வொருவரும் தன்னை தானே மாற்றினால் கட்டாயம் மாறும் நம் பாரதம்..

ஒன்று முதல் பத்து வரை..!!


ஐந்து ஐந்து..!!


1. பஞ்சவர்ணம் என்பது கருப்பு,சிவப்பு,பச்சை,மஞ்சள் மற்றும் வெள்ளை.

2.பஞ்சலோகம் என்பது பொன்,வெள்ளி,செம்பு,ஈயம் மற்றும் இரும்பு.


3.பஞ்ச வாசம் என்பது ஏலம்,லவங்கம்,கற்பூரம்,திப்பிலி மற்றும் ஜாதிக்காய்.

4.பஞ்ச ரத்தினம் என்பது பொன்,சுகந்தி,மரகதம்,மாணிக்கம் மற்றும் முத்து.

5.பஞ்ச பூதம் என்பது ஆகாயம்,நீர்,காற்று,நெருப்பு மற்றும் நிலம்.

6.பஞ்ச பாண்டவர்கள் என்பவர்கள் அர்ஜீனன்,பீமன்,நகுலன்,தர்மன் மற்றும் சகாதேவன்.


ஒன்பது ஒன்பது..!!

1.பைசா கோபுரம் ஒன்பது மாடிகள் கொண்டது.

2.ஆஸ்கார் சிலை ஒன்பது பவுண்டு (4 கிலோ) எடை கொண்டது.

3.ஆக்யஸ் எனும் தேளுக்கு ஒன்பது கொடுக்குகள் உள்ளன.

4.செவ்வாய் கிரகத்தில் ஆண்டுக்கு ஒன்பது மாதங்கள் பகலாக இருக்கும்.

5.சூரிய ஒளி பூமியை வந்தடைய ஒன்பது நிமிடங்கள் ஆகும்.

6.ஈரான்-ஈராக் போர் ஒன்பது ஆண்டுகள் நடைப்பெற்றன.


ஒன்று முதல் பத்து வரை..!!

1.ஒரு செல் உயிரினம் அமீபா.

2.இரண்டு தலைநகர் கொண்டது ஜம்மு-காஷ்மீர்.

3.மூன்று வயிறுள்ள விலங்கு ஒட்டகம்.

4.நான்கு வேதங்கள் ரிக்,யசுர்,சாமம் மற்றும் அதர்வணம்.

5.ஐந்து வைட்டமின் அடங்கிய பழம் வாழைப்பழம்.

6.ஆறு கால்கள் கொண்டவை பூச்சியினம்.

7.ஏழு குன்றுகளின் நகரம் எனப்படுவது ரோம்.

8.எட்டு நூல்களின் தொகுப்பு எட்டுத் தொகை.

9.ஒன்பது கோள்களை உடையது சூரிய குடும்பம்.

10.பத்து கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டது பைபிள்.


நன்றி..!!

அருணா பப்ளிகேஷன்ஸ்-சென்னை..

Wednesday 30 December 2015

சொற்கள் அல்ல; தூண்டுகோல்;

       சொற்கள் அல்ல;தூண்டுகோல்;


வெற்றி சுலபமல்ல; தோல்வி நிலையல்ல.

முடியாது என்பது மூடநம்பிக்கை!!
முடியுமா என்பது அவநம்பிக்கை!!
முடியும் என்பதே தன்னம்பிக்கை..!!

சூல்நிலையை காரணம் காட்டதே ..!!
சூல்நிலையை நீயே உருவாக்கு..!!

இந்த உலகம் ஏன் இப்படி இருக்கிறது என்று,
பார்ப்பவர்களை விட, ஏன் இப்படி இருக்க கூடாது என்று,நினைப்பவர்கள் தான் வெற்றி பெறுகிறார்கள்..!!

முடியும் வரை முயற்சி செய்யுங்கள்,
உங்களால் முடியும் வரை அல்ல..!!
நீங்கள் நினைத்த செயல் முடியும் வரை..!!

உங்களுடைய இலட்சியம் மலையைவிட உயர்வாக
இருந்து உங்கள் ஈடுபாடு கடலைவிட ஆழமாக இருந்தால் உங்கள் எதிர்காலம் சூரியனை விட பிரகாசமாக இருக்கும்..!!

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவது இல்லை..!!

விதியை மதி ஆராய்ச்சி செய்யலாம் ..!!
ஆட்சி செய்ய முடியாது..!!

எழுந்தால் விருட்சமாய் எழு..!!
விழுந்தால் அருவியாய் விழு..!!
ஓடினால் நதியாய் ஓடு..!!
நின்றால் மலையாய் நில்..!!
வாழ்ந்தால் வரலாறாய் வாழ்..!!

மற்றவர்களைப் போல் நாம் இல்லையே
என்று எண்ணாதீர்கள்..!!
உங்களைப்போல் இல்லையே என்று மற்றவர்களை
நினைக்க வையுங்கள்..!!

ஒரே குறிக்கோள்
அளவற்ற ஊக்கம்
சோர்வற்ற முயற்சி
தளர்வற்ற நெஞ்சுருதி
சளைக்காத உழைப்பு
சாதிக்க கற்றுக் கொள்..!!
வெற்றி நிச்சயம்..!!

காரணம் சொல்பவர்கள் வெற்றி பெறுவதில்லை
வெற்றி பெறுபவர்கள் காரணம் சொல்வதில்லை..!!

வெற்றி வரும்போது அதற்கு தலையில் இடம்
கொடுக்கதே..!!
தோல்வி வரும்போது அதற்கு இதற்கு இடம்
கொடுக்கதே..!!

தலை குனிந்து படிப்பது,
தலை நிமிர்ந்து நிற்கவே..!!

கனவுகள் மெய்ப்பட வேண்டும்..!!

இன்னும் நிறைய உள்ளன அதை அடுக்கிக் கொண்டே செல்லலாம்..ஒவ்வொருவருமே தனது வாழ்க்கைப் பயணத்தை தேடு பொருள் இல்லாமல் நகர்த்திக் கொண்டு இருக்கிறார்கள் ..ஒரு சிலர் வாழ்க்கையை  புரிதலோடு நகர்த்துக்கின்றன..தடுமாற்றம் அடையும் போது இது போன்ற சொற்கள் ஒரு துணிச்சலை தருக்கின்றன என்பது எனது கருத்து..நான் இது போன்ற கருத்தால் தான் என் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கியுள்ளேன்..நாம் சென்றடைய வேண்டிய தூரம் அதிகம் ..ஆனால் சில சந்தர்ப்பக் காரணத்தால் தளர்ந்து செல்கிறோம்."முடியாது என்பது முயலாலது மட்டுமே" .என் வாழ்வில் நான் மிகவும் முக்கியமாக கருத்தில் கொண்ட சொற்கள்  அண்மையில் விதைக்கப்பட்ட அப்துல் கலாம் ஐயாவின் கோட்பாடுகளும் என் பார்வில் நான் காணும் எனது தமிழ் ஆசிரியர் முனைவர்.இரா.குணசீலன் ஐயாவின் வார்த்தைகளும்  தான் எனது வேத வாக்குகள்..
 









      



அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...