Friday 19 February 2016

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை... !!



வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை.

இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின்
பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது:

* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு.

அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். 




அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக
போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.


* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத வேண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள்.

எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண்
பரிசோதனை செய்வது நல்லது.

* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது.

இது முற்றிலும் தவறு.

மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு
எச்சரிக்கை சின்னம்.

ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர
நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.



* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும்.

அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும்.

அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும்.

ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து
திரும்புகின்றனர்.

இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

* கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது

சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது.

அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர்.

காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில்
இருந்து கண்களை பாதுகாக்கும்.

வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின்
வேர்கள் அதிகம் வெளி வராது.

இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை
அதிகம் "அப்சார்ப்' செய்கிறது.

விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.


* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது.

மொபைல் போன் "சிக்னல்' இல்லாத
இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு' இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.

மொத்தத்தில்விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து

நம்மை பாதுகாக்கும்.

Thank info

Puthiya Thalaimurai TV

இந்த நல்ல விஷயத்தை பலருடன் பகிரலாமே!!!!




நாணயங்கள்..!!


 
பிரிட்டிஷ் ஆட்சியின் போது
          
இந்திய விடுதலையான பிறகு
சோழர் காலத்தில்






இவை அனைத்தும் பழங்கால நாணயங்கள் 







இந்த நாணயங்களும் நம் நாட்டில் பயன்படுத்தியவை என்பதில் ஆச்சரியம் தான்.தெரிந்துக் கொள்வோம் நம் வரலாற்று பக்கத்தை கொஞ்சம்.நாணயங்கள் ரூபாய்களாய் மாறின மனிதன் பூதமாக மாறினான்.


காலங்கள் மாறினாலும் நம் பழமைகள் என்றும் அழிவதில்லை..!!!

அறிவியலின் அதிசயிக்கத்தக்க அடுத்தகட்டம்..!!




ஈர்ப்பு கவர்ச்சி அலைகள் கண்டுபிடிப்பு..!!

வாஷிங்டன்;

இரண்டு கருந்துளைகள் ஒன்றொன்று சுற்றி பிணைந்தபோது அண்டவெளியில் ஏற்பட்ட ஈர்ப்பு கவர்ச்சி அலைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்.இது வானியல் அறிவியலில் அதிசயிக்கத்தக்க அடுத்த கட்டமாக வர்ணிக்கப்படுகிறது.

விண்வெளியில் சூரியனைப் போன்ற மிகப் பெரிய நட்சத்திரங்கள் உள்ளன.அவை தங்களது வாழ்நாளின் இறுதியில் கருந்துளைகளாக மாறும்.அவை ஒன்றையொன்று  சுற்றும்போது அண்டவெளியில் அதிர்வுகள் ஏற்பட்டு அவை ஈர்ப்பு கவர்ச்சி அலைகளாக வெளியாகும் என்று 100  ஆண்டுகளுக்கு முன்பே இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கணித்திருந்தார்.

அந்த கணிப்பு சரியானது என்பதை விஞ்ஞானிகள் இப்போது உறுதி செய்துள்ளனர்.இது குறித்து லிகோ(LIGO-ADVANCED LASER INTERFEROMETER GRAVITATIONAL-WAVE OBSERVATORY)  திட்ட செயல் இயக்குநர் டேவிட் ரிட்ஸ் கூறியது,விண்வெளியில் ஏதோ ஒரு இடத்தில் சூரியனை போன்று 29 மற்றுபம் 36 மடங்குகள் பெரிய இரண்டு ராட்சத கருந்துளைகள் அல்லது விண்மீன்கள் ஒன்றை ஒன்று சுற்றிக் கொண்டே மோதிப் பிணைந்துள்ளன.அந்த நிகழ்வால் ஏற்பட்ட ஈர்ப்பு கவர்ச்சி அலைகளை இப்போது கண்டுபிடித்துள்ளோம்.


அந்த இரண்டும் பிணைந்து சூரியனைவிட 62 மடங்குகள் பெரியதாக மாறிவிட்டது.இந்த நிகழ்வால்  உருவான ஈர்ப்பு கவர்ச்சி அலைகள் பிரபஞ்சத்தின் கீச்சுக்குரல் போல வெளிப்பட்டிருக்கின்றன,

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Thursday 11 February 2016

மூலதனம் என்றால் என்ன..?


மூலதனம்;

ஐம்பது ரூபாயில் 30 ரூபாயை எடுத்துக் கொண்ட முதலாளி அதில் 20 ரூபாயை தன்னுடைய செலவுக்கு எடுத்துக் கொண்டு மீதி 10 ரூபாயை தொழில் விருத்திக்காக பயன்படுத்துகிறார் என்றால் அந்த 10 ரூபாய் தான் மூலதனம்.உபரிமதிப்பின் எந்த பகுதி மீண்டும் உபரி மதிப்பைத் தோற்றுவிக்கப் பயன்படுத்தப்படுகிறதோ அந்த பகுதியே மூலதனம்.

மூலதனம் மற்றும் உபரிமதிப்பு;

மூலதனம் உபரிமதிப்பைத் தோற்றுவிக்கும்.உபரிமதிப்பு மூலதனத்தை பெருக்கும்.மூலதனமும் உபரிமதிப்பும் இரண்டும் எதிர் எதிர் கூறுகள்(இயங்கியலின் முதல் விதியான எதிர் கூறுகளின் ஒற்றுமையும் போராட்டமும்).



கூலியும் உபரிமதிப்பும்;

கூலியையும் உபரிமதிப்பையும் முறையே தொழிலாளியும் முதலாளிலும் எந்த விகிதத்தில் பிரித்துக்கொள்ள  வேண்டும் என்பதைத் தான் முதலாளித்துவ அறிஞர்கள் கணக்கிட்டனர்கள்.பிரச்சனையின் தீர்வாக இருவரும் அதை (கூலியையும் உபரிமதிப்பையும்)நியாமான முறையில் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று தான் அவர்கள் கூறினார்கள்.
முதலாளித்துவ அறிஞர்கள் பிரச்சனையின் முடிவை எந்த இடத்தில்  கண்டார்களோ,அதே இடத்தில் தான் சிக்கலின் ஆணிவேர் இருக்கிறது என்று மார்க்ஸ் நிருபித்தார்.மூலதனத்துக்கும் உபரிமதிப்புக்கும் இடையே உள்ள முரண்பாட்டால் முதலாளித்துவ சமூகத்தில் ஏற்படும்  அளவு மாற்றம் எப்படி இருக்கும் ..??




உபரிமதிப்பை எப்படி அதிகரிக்கலாம் என்று தான் தினமும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.அவருக்கு இரண்டு வழிகள் உள்ளன.
1.கூலி கொடுக்கப்படாத உபரி உழைப்பு  நேரத்தை அதிகப்படுத்துவது.
2.அவசியமான உழைப்பு நேரத்தை குறைப்பது.

அதென்ன கூலி கொடுக்கப்படாத உபரி உழைப்பு நேரத்தை அதிகப்படுத்துவது..??


முதலாளித்துவத்தின் ஆரம்பத்தில் ஒரு நாளில் வேலை நேரம் என்பது 16 மணி என்று கூட இருந்தது.தொழிலாளிகளின் இடைவிடாத போராட்டத்தால் அது 8 மணிநேரமாக குறைக்கப்பட்டது.உபரி உழைப்பின் நேரத்தை அதிகப்படுத்துவதில் ஒரு எல்லை உண்டு.அதாவது தொழிலாளிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.இல்லையென்றால் அவரால் தொடர்ந்து வேலைக்கு வர முடியாமல் போய்விடும்.எனவே முதலாளிகள் இரண்டாவது  வழியே பின்பற்ற ஆரம்பித்தார்கள்.அதாவது அவசியமான வேலை நேரத்தை குறைப்பது.கடந்த அத்தியாத்தில் சொல்லப்பட்ட உதாரணத்தில் அவசியமான உழைப்பு நேரம் 8 மணி நேரம் பார்த்தோம்.அதாவது ரூ.230 மதிப்பிலான ஒரு பொருள் 8 மணி நேரத்தில் தயாரிக்கப்படுகிறது.புதிய தொழில்நுட்பத்தின் காரணமாக  அதே ரூ.230 மதிப்பிலான பொருள் 4 மணி நேரத்தில் தயாரிக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம்,என்ன ஆகும்..??இன்னொரு 4 மணி நேர உழைப்பு உபரி உழைப்பு என்றாகிறது.

ஒரு நாள் வேலை;

ஒரு நாளின் 12 மணி நேர வேலை நாளில் முதலில் அவசியமான உழைப்பு நேரம் 8 மணி நேரம் என்றும் 4 மணி நேரம் என்றும் இருந்தது.இப்போது அவசியமான உழைப்பு நேரம் 4  என்றும் உபரி உழைப்பின் நேரம் 4 மணி நேரம் என்றும் ஆகிறது.ஒரு பொருளின் மதிப்பு என்பது உழைப்பின் கால அளவைப் பொருத்தது என்று முன்பே பார்த்திருந்தோம்.8 மணி நேரத்தில் தயாரிக்கப்படும் ஒரு பொருள் 4 மணி நேரத்தில் தயாரிக்கப்பட்டால் அதன் மதிப்பு பாதியாக குறையும்.எனவே எந்த ஒரு முதலாளியும் தங்களின் தொழில் நுட்பத்தை வெளியிடமாட்டார்கள்.தாங்கள் மட்டுமே அதை பயன்படுத்தி லாபம் பார்ப்பார்கள்.



தொழில்நுட்பம் வளர உபரி மதிப்பு அதிகம்;

எல்லா முதலாளிகளும் அந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தால் அந்த பொருளின் மதிப்பும் குறைந்துவிடும்.பிறகு மீண்டும் வேறொரு தொழில் நுட்பத்தை கண்டு பிடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு முதலாளிகள் தள்ளப்படுவார்கள்.எனவே முதலாளித்துவம் சுய லாபத்துக்காக தொழில் நுட்ப வளர்ச்சியை துரிதப்படுத்தியே தீரவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறது.எந்த சமூக அமைப்பின் காலக்கட்டத்திலும் இல்லாத தொழில் நுட்ப வளர்ச்சி முதலாளித்துவ சமூகத்தில் நடைப்பெறுவதற்கு காரணம் இதுதான்.தொழில்நுட்பம் வளர வளர உபரி மதிப்பும் அதிகமாகிறது.மூலதனமும் அதிகரிக்கிறது.

முடிவுரை;

முதலாளித்துவ பொருளாதார உற்பத்தி முறை என்பது வரைமுறையற்ற உற்பத்தியைக் கொண்டுள்ளது.எனவே ஒரே பண்டத்தை உற்பத்தி செய்யும் முதலாளிகள் தங்களுக்குள் போட்டியிடுகின்றனர்.தொழில்நுட்ப வளர்ச்சியால் ஒரு சில முதலாளிகள் மற்ற முதலாளிகளை வீழ்த்தி பெருகப் பெருக  அவர்கள் அமைப்பு  ரீதியில்  அணிதிரண்டு புரட்சி செய்யும் போது சமூக மாற்றம் ஏற்படும் அது ஒரு சோஷியலிச அரசாக இருக்கும்.   






அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...