Showing posts with label தெரிந்துக் கொள்வோம்.. Show all posts
Showing posts with label தெரிந்துக் கொள்வோம்.. Show all posts

Friday 19 February 2016

தமிழால் சொல்ல முடியும் எண்களின் பெயர்..!!



==தமிழில் கீழ்வாய் எண்கள்==



* 15/16 = 0.9375 = முக்காலே மூன்று வீசம்

* 3/4 = 0.75 = முக்கால்

* 1/2 = 0.5 = அரை

* 1/4 = 0.25 = கால்

* 1/5 = 0.2 = நால்மா/நான்மா

* 3/16 = 0.1875 = மூன்று வீசம்

* 3/20 = 0.15 = மூன்றுமா

* 1/8 = 0.125 = அரைக்கால்

* 1/10 = 0.1 = இருமா

* 1/16 = 0.0625 = வீசம்

* 1/20 = 0.05 = மா

* 3/64 = 0.046875 = முக்கால் வீசம்

* 3/80 = 0.0375 = முக்காணி

* 1/32 = 0.03125 = அரை வீசம்

* 1/40 = 0.025 = அரை மா

* 1/64 = 0.015625 = கால் வீசம்

* 1/80 = 0.0125 = காணி

* 3/320 = 0.009375 = அரைக்காணி முந்திரி

* 1/160 = 0.00625 = அரைக் காணி

* 1/320 = 0.003125 = முந்திரி

* 3/1280 = 0.00234375 = கீழ் முக்கால்

* 1/640 = 0.0015625 = கீழ் அரை

* 1/1280 = 0.00078125 = கீழ்க் கால்

* 1/1600 = 0.000625 = கீழ் நால்மா

* 3/5020 = 0.000597609 = கீழ் மூன்று வீசம்

* 1/2560 =0.000390625 = கீழ் அரைக்கால்

* 1/3200 = 0.0003125 = கீழ் இருமா

* 1/5120 = 0.000195312= கீழ் மாகாணி

* 1/6400 = 0.00015625 = கீழ் மா

* 3/25600 = 0.000117187 = கீழ் முக்காணி

* 1/12800 = 0.000078125 = கீழ் அரைமா

* 1/25600 = 0.000039062 = கீழ்க்காணி

* 1/51200 = 0.000019531 = கீழ் அரைக்காணி

* 1/102400 = 0.000009765 = கீழ் முந்திரி}

*1/2,150,400= இம்மி

*1/23,654,400= மும்மி

*1/165,580,800= அணு

*1/1,490,227,200= குணம்

*1/7,451,136,000= பந்தம்

*1/44,706,816,000= பாகம்

*1/312,947,712,000= விந்தம்

*1/5,320,111,104,000= நாகவிந்தம்

*1/74,481,555,456,000= சிந்தை

*1/1,489,631,109,120,000= கதிர்முனை

*1/59,585,244,364,800,000= குரல்வளைப்பிடி

*1/3,575,114,661,888,000,000= வெள்ளம்

*1/357,511,466,188,800,000,000= நுண்மணி

*1/2,323,824,530,227,200,000,000= தேர்த்துகள்

ஊழல் குறைவான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 76-வது இடம்..!!


உலக நாடுகளின் ஊழல் நிலவரம் குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்னும் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.இதில் அந்த நாடுகளின் ஊழலற்ற நிர்வாகம் ,ஊழலுக்கு எதிரான நடவடிக்கையின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படுகிறது.

2015-ம் ஆண்டு இந்த தரவரிசைப் பட்டியல் கணக்கீட்டு 168 நாடுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.இதில் 2014-ம் ஆண்டையப் போலவே ஐரோப்பிய நாடான டென்மார்க் ஊழலற்ற நாடாக முதலிடத்தையும்,பின்லாந்துக்கு 2-வது இடமும்,சுவிடனுக்கு 3-வது இடமும் கிடைத்தன.


ஆப்பிரிக்க நாடான சோமாலியாவும்,ஆசியா நாடான வடகொரியாவும் ஊழல் மலிந்த நாடுகள் பட்டியலில் கடைசி 2 இடங்களைப் பிடித்தன.இந்த பட்டியலில்இந்தியாவுக்கு 76-வது இடம் கிடைத்தது.2014-ம் ஆண்டு 85-வது இடத்தில் இருந்த இந்தியா 9 இடங்கள் முன்னேறி இருக்கிறது.


2014-ல் இருந்ததை விட இந்தியாவில் 2015-ல் ஊழல் சற்று குறைந்து காணப்படுகிறது.எனினும் இதில் இந்தியா பெற்றுள்ள மொத்த மதிப்பு 2014-ம் ஆண்டைப் போலவே 100-க்கு 38 ஆக இருக்கிறது.


இது குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் தலைவர் ஜோஸ் உகாஸ் கூறுகையில் ஆசிய நாடுகளில் இந்தியா, இலங்கையைப் பொறுத்தவரை ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தலைவர்கள் அறிவித்த எதிர்ப்புகள் அவ்வளவாக நிறைவேறவில்லை.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2015-ல் 64 நாடுகள் ஊழலை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் கண்டுள்ளன.53 நாடுகள் இதில் பின்தங்கின.மற்ற நாடுகளின் நிலையில் ஏற்ற இறக்கம் எதுவும் இல்லை என்றார். 

Image result for ஊழல்


முகநூலில் இருக்கும் பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தும் சைபர் குற்றவாளிகள்..!!



சமீபத்தில் பிரபல ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரை ஒன்று தீவிர பேஸ்புக் பயனர்களை சற்றே கலக்கத்தில் ஆழ்த்தில் உள்ளது.குறிப்பாக பேஸ்புக்கில் நொடிக்கு நொடி தம்படம்(செல்ஃபி) பதிவேற்றும் பெண்களுக்கு எச்சரிக்கையாகவே அமைந்துள்ளது.முகநூலில் இருக்கும் மிகப்பெரிய குறைப்பாடு யாருடையக் கணக்கில் இருந்தும் யார் வேண்டுமானாலும் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.இந்த ஒரு விஷசயத்தை பயன்படுத்திக் கொண்டுள்ள சைபர் குற்றவாளிகள் ஆபாச வலைத்தளங்களை பிரபலப்படுத்த முகநூலில் இருக்கும் புகைப்படத்தை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.இதற்காக இயங்கும் குழுக்கள் முகநூலில் இருக்கும் அழகானப் பெண்களின் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்துக் கொண்டு அவர்களை தன்னோடு தொடர்புடைய மற்றொரு குழுவிற்கு அனுப்புகிறது.

அந்தக் குழு குறிப்பட்ட அந்த பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக மார்ப் செய்து தங்களின் ஆபாச வலைத்தளங்களுக்கு பயன்படுத்திக்  கொள்கிறது.இப்படி சிக்கும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகம் என்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக சைபர் குற்றங்கள் நிபுணர் கிஸ்லே சவுத்ரி கூறுகையில் இன்று நாம் சந்திக்கும் மிக அச்சுறுத்தலான சைபர் குற்றங்களில் ஒன்று தான் முகநூலில் உள்ள பெண்களின் புகைப்படத்தை ஆபாச வலைத்தளங்களுக்கு பயன்படுத்துவது தான்.கவரும் விதமாக இருக்கும் பெண்களின் புகைப்படத்தை தான் இத்தகைய குற்றங்களுக்கு பெரிதும் பயன்படுத்துப்படுகிறது.இது தொடர்பாக நாங்கள் மிகத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை... !!



வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை.

இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின்
பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது:

* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு.

அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். 




அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக
போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.


* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத வேண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள்.

எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண்
பரிசோதனை செய்வது நல்லது.

* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது.

இது முற்றிலும் தவறு.

மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு
எச்சரிக்கை சின்னம்.

ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர
நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.



* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும்.

அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும்.

அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும்.

ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து
திரும்புகின்றனர்.

இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

* கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது

சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது.

அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர்.

காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில்
இருந்து கண்களை பாதுகாக்கும்.

வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின்
வேர்கள் அதிகம் வெளி வராது.

இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை
அதிகம் "அப்சார்ப்' செய்கிறது.

விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.


* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது.

மொபைல் போன் "சிக்னல்' இல்லாத
இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு' இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.

மொத்தத்தில்விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து

நம்மை பாதுகாக்கும்.

Thank info

Puthiya Thalaimurai TV

இந்த நல்ல விஷயத்தை பலருடன் பகிரலாமே!!!!




நாணயங்கள்..!!


 
பிரிட்டிஷ் ஆட்சியின் போது
          
இந்திய விடுதலையான பிறகு
சோழர் காலத்தில்






இவை அனைத்தும் பழங்கால நாணயங்கள் 







இந்த நாணயங்களும் நம் நாட்டில் பயன்படுத்தியவை என்பதில் ஆச்சரியம் தான்.தெரிந்துக் கொள்வோம் நம் வரலாற்று பக்கத்தை கொஞ்சம்.நாணயங்கள் ரூபாய்களாய் மாறின மனிதன் பூதமாக மாறினான்.


காலங்கள் மாறினாலும் நம் பழமைகள் என்றும் அழிவதில்லை..!!!

அறிவியலின் அதிசயிக்கத்தக்க அடுத்தகட்டம்..!!




ஈர்ப்பு கவர்ச்சி அலைகள் கண்டுபிடிப்பு..!!

வாஷிங்டன்;

இரண்டு கருந்துளைகள் ஒன்றொன்று சுற்றி பிணைந்தபோது அண்டவெளியில் ஏற்பட்ட ஈர்ப்பு கவர்ச்சி அலைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்.இது வானியல் அறிவியலில் அதிசயிக்கத்தக்க அடுத்த கட்டமாக வர்ணிக்கப்படுகிறது.

விண்வெளியில் சூரியனைப் போன்ற மிகப் பெரிய நட்சத்திரங்கள் உள்ளன.அவை தங்களது வாழ்நாளின் இறுதியில் கருந்துளைகளாக மாறும்.அவை ஒன்றையொன்று  சுற்றும்போது அண்டவெளியில் அதிர்வுகள் ஏற்பட்டு அவை ஈர்ப்பு கவர்ச்சி அலைகளாக வெளியாகும் என்று 100  ஆண்டுகளுக்கு முன்பே இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கணித்திருந்தார்.

அந்த கணிப்பு சரியானது என்பதை விஞ்ஞானிகள் இப்போது உறுதி செய்துள்ளனர்.இது குறித்து லிகோ(LIGO-ADVANCED LASER INTERFEROMETER GRAVITATIONAL-WAVE OBSERVATORY)  திட்ட செயல் இயக்குநர் டேவிட் ரிட்ஸ் கூறியது,விண்வெளியில் ஏதோ ஒரு இடத்தில் சூரியனை போன்று 29 மற்றுபம் 36 மடங்குகள் பெரிய இரண்டு ராட்சத கருந்துளைகள் அல்லது விண்மீன்கள் ஒன்றை ஒன்று சுற்றிக் கொண்டே மோதிப் பிணைந்துள்ளன.அந்த நிகழ்வால் ஏற்பட்ட ஈர்ப்பு கவர்ச்சி அலைகளை இப்போது கண்டுபிடித்துள்ளோம்.


அந்த இரண்டும் பிணைந்து சூரியனைவிட 62 மடங்குகள் பெரியதாக மாறிவிட்டது.இந்த நிகழ்வால்  உருவான ஈர்ப்பு கவர்ச்சி அலைகள் பிரபஞ்சத்தின் கீச்சுக்குரல் போல வெளிப்பட்டிருக்கின்றன,

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Thursday 11 February 2016

மூலதனம் என்றால் என்ன..?


மூலதனம்;

ஐம்பது ரூபாயில் 30 ரூபாயை எடுத்துக் கொண்ட முதலாளி அதில் 20 ரூபாயை தன்னுடைய செலவுக்கு எடுத்துக் கொண்டு மீதி 10 ரூபாயை தொழில் விருத்திக்காக பயன்படுத்துகிறார் என்றால் அந்த 10 ரூபாய் தான் மூலதனம்.உபரிமதிப்பின் எந்த பகுதி மீண்டும் உபரி மதிப்பைத் தோற்றுவிக்கப் பயன்படுத்தப்படுகிறதோ அந்த பகுதியே மூலதனம்.

மூலதனம் மற்றும் உபரிமதிப்பு;

மூலதனம் உபரிமதிப்பைத் தோற்றுவிக்கும்.உபரிமதிப்பு மூலதனத்தை பெருக்கும்.மூலதனமும் உபரிமதிப்பும் இரண்டும் எதிர் எதிர் கூறுகள்(இயங்கியலின் முதல் விதியான எதிர் கூறுகளின் ஒற்றுமையும் போராட்டமும்).



கூலியும் உபரிமதிப்பும்;

கூலியையும் உபரிமதிப்பையும் முறையே தொழிலாளியும் முதலாளிலும் எந்த விகிதத்தில் பிரித்துக்கொள்ள  வேண்டும் என்பதைத் தான் முதலாளித்துவ அறிஞர்கள் கணக்கிட்டனர்கள்.பிரச்சனையின் தீர்வாக இருவரும் அதை (கூலியையும் உபரிமதிப்பையும்)நியாமான முறையில் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று தான் அவர்கள் கூறினார்கள்.
முதலாளித்துவ அறிஞர்கள் பிரச்சனையின் முடிவை எந்த இடத்தில்  கண்டார்களோ,அதே இடத்தில் தான் சிக்கலின் ஆணிவேர் இருக்கிறது என்று மார்க்ஸ் நிருபித்தார்.மூலதனத்துக்கும் உபரிமதிப்புக்கும் இடையே உள்ள முரண்பாட்டால் முதலாளித்துவ சமூகத்தில் ஏற்படும்  அளவு மாற்றம் எப்படி இருக்கும் ..??




உபரிமதிப்பை எப்படி அதிகரிக்கலாம் என்று தான் தினமும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.அவருக்கு இரண்டு வழிகள் உள்ளன.
1.கூலி கொடுக்கப்படாத உபரி உழைப்பு  நேரத்தை அதிகப்படுத்துவது.
2.அவசியமான உழைப்பு நேரத்தை குறைப்பது.

அதென்ன கூலி கொடுக்கப்படாத உபரி உழைப்பு நேரத்தை அதிகப்படுத்துவது..??


முதலாளித்துவத்தின் ஆரம்பத்தில் ஒரு நாளில் வேலை நேரம் என்பது 16 மணி என்று கூட இருந்தது.தொழிலாளிகளின் இடைவிடாத போராட்டத்தால் அது 8 மணிநேரமாக குறைக்கப்பட்டது.உபரி உழைப்பின் நேரத்தை அதிகப்படுத்துவதில் ஒரு எல்லை உண்டு.அதாவது தொழிலாளிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.இல்லையென்றால் அவரால் தொடர்ந்து வேலைக்கு வர முடியாமல் போய்விடும்.எனவே முதலாளிகள் இரண்டாவது  வழியே பின்பற்ற ஆரம்பித்தார்கள்.அதாவது அவசியமான வேலை நேரத்தை குறைப்பது.கடந்த அத்தியாத்தில் சொல்லப்பட்ட உதாரணத்தில் அவசியமான உழைப்பு நேரம் 8 மணி நேரம் பார்த்தோம்.அதாவது ரூ.230 மதிப்பிலான ஒரு பொருள் 8 மணி நேரத்தில் தயாரிக்கப்படுகிறது.புதிய தொழில்நுட்பத்தின் காரணமாக  அதே ரூ.230 மதிப்பிலான பொருள் 4 மணி நேரத்தில் தயாரிக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம்,என்ன ஆகும்..??இன்னொரு 4 மணி நேர உழைப்பு உபரி உழைப்பு என்றாகிறது.

ஒரு நாள் வேலை;

ஒரு நாளின் 12 மணி நேர வேலை நாளில் முதலில் அவசியமான உழைப்பு நேரம் 8 மணி நேரம் என்றும் 4 மணி நேரம் என்றும் இருந்தது.இப்போது அவசியமான உழைப்பு நேரம் 4  என்றும் உபரி உழைப்பின் நேரம் 4 மணி நேரம் என்றும் ஆகிறது.ஒரு பொருளின் மதிப்பு என்பது உழைப்பின் கால அளவைப் பொருத்தது என்று முன்பே பார்த்திருந்தோம்.8 மணி நேரத்தில் தயாரிக்கப்படும் ஒரு பொருள் 4 மணி நேரத்தில் தயாரிக்கப்பட்டால் அதன் மதிப்பு பாதியாக குறையும்.எனவே எந்த ஒரு முதலாளியும் தங்களின் தொழில் நுட்பத்தை வெளியிடமாட்டார்கள்.தாங்கள் மட்டுமே அதை பயன்படுத்தி லாபம் பார்ப்பார்கள்.



தொழில்நுட்பம் வளர உபரி மதிப்பு அதிகம்;

எல்லா முதலாளிகளும் அந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தால் அந்த பொருளின் மதிப்பும் குறைந்துவிடும்.பிறகு மீண்டும் வேறொரு தொழில் நுட்பத்தை கண்டு பிடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு முதலாளிகள் தள்ளப்படுவார்கள்.எனவே முதலாளித்துவம் சுய லாபத்துக்காக தொழில் நுட்ப வளர்ச்சியை துரிதப்படுத்தியே தீரவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறது.எந்த சமூக அமைப்பின் காலக்கட்டத்திலும் இல்லாத தொழில் நுட்ப வளர்ச்சி முதலாளித்துவ சமூகத்தில் நடைப்பெறுவதற்கு காரணம் இதுதான்.தொழில்நுட்பம் வளர வளர உபரி மதிப்பும் அதிகமாகிறது.மூலதனமும் அதிகரிக்கிறது.

முடிவுரை;

முதலாளித்துவ பொருளாதார உற்பத்தி முறை என்பது வரைமுறையற்ற உற்பத்தியைக் கொண்டுள்ளது.எனவே ஒரே பண்டத்தை உற்பத்தி செய்யும் முதலாளிகள் தங்களுக்குள் போட்டியிடுகின்றனர்.தொழில்நுட்ப வளர்ச்சியால் ஒரு சில முதலாளிகள் மற்ற முதலாளிகளை வீழ்த்தி பெருகப் பெருக  அவர்கள் அமைப்பு  ரீதியில்  அணிதிரண்டு புரட்சி செய்யும் போது சமூக மாற்றம் ஏற்படும் அது ஒரு சோஷியலிச அரசாக இருக்கும்.   






முகநூலில் இருக்கும் பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தும் சைபர் குற்றவாளிகள்..!!



சமீபத்தில் பிரபல ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரை ஒன்று தீவிர பேஸ்புக் பயனர்களை சற்றே கலக்கத்தில் ஆழ்த்தில் உள்ளது.குறிப்பாக பேஸ்புக்கில் நொடிக்கு நொடி தம்படம்(செல்ஃபி) பதிவேற்றும் பெண்களுக்கு எச்சரிக்கையாகவே அமைந்துள்ளது.முகநூலில் இருக்கும் மிகப்பெரிய குறைப்பாடு யாருடையக் கணக்கில் இருந்தும் யார் வேண்டுமானாலும் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.இந்த ஒரு விஷசயத்தை பயன்படுத்திக் கொண்டுள்ள சைபர் குற்றவாளிகள் ஆபாச வலைத்தளங்களை பிரபலப்படுத்த முகநூலில் இருக்கும் புகைப்படத்தை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.இதற்காக இயங்கும் குழுக்கள் முகநூலில் இருக்கும் அழகானப் பெண்களின் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்துக் கொண்டு அவர்களை தன்னோடு தொடர்புடைய மற்றொரு குழுவிற்கு அனுப்புகிறது.

அந்தக் குழு குறிப்பட்ட அந்த பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக மார்ப் செய்து தங்களின் ஆபாச வலைத்தளங்களுக்கு பயன்படுத்திக்  கொள்கிறது.இப்படி சிக்கும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகம் என்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக சைபர் குற்றங்கள் நிபுணர் கிஸ்லே சவுத்ரி கூறுகையில் இன்று நாம் சந்திக்கும் மிக அச்சுறுத்தலான சைபர் குற்றங்களில் ஒன்று தான் முகநூலில் உள்ள பெண்களின் புகைப்படத்தை ஆபாச வலைத்தளங்களுக்கு பயன்படுத்துவது தான்.கவரும் விதமாக இருக்கும் பெண்களின் புகைப்படத்தை தான் இத்தகைய குற்றங்களுக்கு பெரிதும் பயன்படுத்துப்படுகிறது.இது தொடர்பாக நாங்கள் மிகத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

Tuesday 2 February 2016

சில நதிகளின் சிறப்பு..!!


 நதியின் செய்திகள்;


காக்ரா நதி

1.கோமதி,காக்ரா,கண்டகி,கோசி ஆகிய நதிகள் கங்கை நதியின் துணை நதிகள்.
கோசி நதி

2.சீலம்,சீனாப்,ராவி,பியாஸ்,சட்லெஜ் ஆகியவை சிந்து நதியின் துணை நதிகள்.

சீனாப் நதி

3.கோதவரி நதி தட்சிண கங்கை என்று அழைக்கப்படுகிறது.

ராவி நதி

4.மணலாறு என்று  அழைக்கப்படுவது பாலாறு.

சட்லெஜ்  நதி

5.காவிரியின் இன்னொரு பெயர் பொன்னி.


கோதாவரி  நதி


நதிக்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற நகரங்கள்;
கங்கை  நதி

1.கங்கைக் கரையில் உள்ள மிகப்பழமையான நகரம் ஹரித்துவார்.

2.கோமதி நதிக்கரையில் லக்னோ அமைந்துள்ளது.

3.நர்மதை நதியின் மீது அமைந்த நகரம் ஜபல்பூர் ஆகும்.

 4.அயோத்தி நகரில் ஓடும் நதியின் பெயர் சரயு.
சரயு  நதி
5.கோதவரி நதியின் மீது அமைந்த நகரம் நாசிக்.

6.ஹூக்ளி நதியில் அமைந்த மிகப்பெரிய நகரம் கொல்கத்தா.
ஹுக்ளி  நதி


7.யமுனா நதிக்கரையில்  அமைந்துள்ளது  உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால்.
யமுனா  நதி

சில நதிகளின் படத்தை செருகியுள்ளேன் .இந்த நதிகளும் நமது இந்தியாவில் தான் உள்ளது.எத்தனை பேருக்கு தெரியும் இது..??

நடந்தால் ஆறு..!!எழுந்தால் அருவி..!! நின்றால் கடல்லலோ..!! சிறு நதிகளே..!!நதித்தொடும் கரைகளே..!! கரைத்தொடும் நுரைகளே..!! நுரைகளின் இவள் முகமே..!! நதியே நதியே காதல் நதியே நீயும் பெண் தானே..!! 

இந்த பாடலில் கவிஞர் நதியின் அழகை சிறப்பாக பெண்ணோடு ஒப்பிட்டு கூறியுள்ளார்.நதி என்பது மங்கையின் அழகு என்பதையும்  நயப்பட கூறியுள்ளார்.


Saturday 2 January 2016

ஒன்று முதல் பத்து வரை..!!


ஐந்து ஐந்து..!!


1. பஞ்சவர்ணம் என்பது கருப்பு,சிவப்பு,பச்சை,மஞ்சள் மற்றும் வெள்ளை.

2.பஞ்சலோகம் என்பது பொன்,வெள்ளி,செம்பு,ஈயம் மற்றும் இரும்பு.


3.பஞ்ச வாசம் என்பது ஏலம்,லவங்கம்,கற்பூரம்,திப்பிலி மற்றும் ஜாதிக்காய்.

4.பஞ்ச ரத்தினம் என்பது பொன்,சுகந்தி,மரகதம்,மாணிக்கம் மற்றும் முத்து.

5.பஞ்ச பூதம் என்பது ஆகாயம்,நீர்,காற்று,நெருப்பு மற்றும் நிலம்.

6.பஞ்ச பாண்டவர்கள் என்பவர்கள் அர்ஜீனன்,பீமன்,நகுலன்,தர்மன் மற்றும் சகாதேவன்.


ஒன்பது ஒன்பது..!!

1.பைசா கோபுரம் ஒன்பது மாடிகள் கொண்டது.

2.ஆஸ்கார் சிலை ஒன்பது பவுண்டு (4 கிலோ) எடை கொண்டது.

3.ஆக்யஸ் எனும் தேளுக்கு ஒன்பது கொடுக்குகள் உள்ளன.

4.செவ்வாய் கிரகத்தில் ஆண்டுக்கு ஒன்பது மாதங்கள் பகலாக இருக்கும்.

5.சூரிய ஒளி பூமியை வந்தடைய ஒன்பது நிமிடங்கள் ஆகும்.

6.ஈரான்-ஈராக் போர் ஒன்பது ஆண்டுகள் நடைப்பெற்றன.


ஒன்று முதல் பத்து வரை..!!

1.ஒரு செல் உயிரினம் அமீபா.

2.இரண்டு தலைநகர் கொண்டது ஜம்மு-காஷ்மீர்.

3.மூன்று வயிறுள்ள விலங்கு ஒட்டகம்.

4.நான்கு வேதங்கள் ரிக்,யசுர்,சாமம் மற்றும் அதர்வணம்.

5.ஐந்து வைட்டமின் அடங்கிய பழம் வாழைப்பழம்.

6.ஆறு கால்கள் கொண்டவை பூச்சியினம்.

7.ஏழு குன்றுகளின் நகரம் எனப்படுவது ரோம்.

8.எட்டு நூல்களின் தொகுப்பு எட்டுத் தொகை.

9.ஒன்பது கோள்களை உடையது சூரிய குடும்பம்.

10.பத்து கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டது பைபிள்.


நன்றி..!!

அருணா பப்ளிகேஷன்ஸ்-சென்னை..

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...